Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo

Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official LogoMybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
media 17 Cover Image
User Image
Drag to reposition cover
media 17 Profile Picture
media 17

India's first social community app for you. Keeping connect with buddys and family !

  • 196 Buds
  • 3015 Likes
  • 1 Following
  • 0 Followers
  • Timeline
  • Photos
  • Videos
  • Groups
    • Following
    • Followers
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#News coimbatore தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இனிவரும் நாட்களில் கொரோனா தடுப்பு ஊசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிகளுக்கான டோக்கன் விநியோகம் செய்யப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். கொரோனா தடுப்பூசி மையங்களில் உள்ள குறைகள் புகார்கள் ஏதேனும் இருப்பின் 1077 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://coimbatore.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#News coimbatoreகாரமடை

காரமடை அருகே ஆதிமாதயனூரை சேர்ந்தவர் சங்கரப்பன் (வயது 49) என்பவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் ஆடுகளை மேயச்சலுக்கு விட்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒரு ஆட்டை திருடிக்கொண்டு தப்ப முயன்றார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து காரமடை போலீசில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆடு திருடியது பன்னிமடையை சேர்ந்த ராஜாமணி (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#mybuddys coimbatore கோவை:-போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தவர்களிடம், போலீசார் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது குறித்து கருத்து கேட்கும் புதிய திட்டம், மாநகர போலீசில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுவாக 'இ-காமர்ஸ்' முறையில் ஒரு பொருளை வாங்கினாலோ, உணவு நிறுவனங்களிடம் உணவு ஆர்டர் செய்தாலோ, அவர்களின் சேவை எவ்வாறு இருந்தது என்பது குறித்து அறிந்து கொள்ள, வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்கப்படும்.வாடிக்கையாளர்கள் தரும் 'ரேட்டிங்'கை பொறுத்து, குறிப்பிட்ட நிறுவனத்தின் சேவை எவ்வாறு இருந்தது என, அறிந்து கொள்ளலாம். அதுபோன்ற ஒரு புதிய திட்டத்தை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர், மாநகர போலீசில் அறிமுகப்படுத்தியுள்ளார்.இத்திட்டத்தின்படி, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கும் நபருக்கு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் நேரடியாக, போன் செய்து கருத்து கேட்பார்கள்.'போலீஸ் ஸ்டேஷனில் உங்களின் புகார் எவ்வாறு விசாரிக்கப்பட்டது, புகாரை யார் விசாரித்தார்கள், ஸ்டேஷனில் உங்களை மரியாதையாக நடத்தினார்களா, போலீசாரின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளித்ததா...' என்பன போன்ற கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.இந்த கருத்துக்களின் அடிப்படையில், மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்களிடம் எவ்வாறு போலீசார் நடந்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.இத்திட்டத்துக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.இத்திட்டம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் கூறியதாவது:பொதுமக்களுக்கு போலீ சாரின் சேவை தரத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நல்ல சேவையையும், பொதுமக்களுக்கு வழங்குவதில் கருத்து கேட்பு தகவல்கள் திரட்டப்படுவது மிகவும் முக்கியமாகும். இதன்மூலம் போலீஸ் தரப்பில் தவறுகள் ஏற்பட்டால், அதனை சரிசெய்து, மக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்க முடியும்.இதற்காக, அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் உள்ள வரவேற்பாளர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் மொபைல்போன் எண்களை, சேகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் எண்கள் தினமும் மதியம் மற்றும் மாலை என, இரு வேளைகளில் மாநகர கட்டுப்பாட்டு அறைக்கு அளிக்கப்படும்.கட்டுப்பாட்டு அறையில் பணியில் இருக்கும் போலீசார், புகார் அளித்த பொதுமக்களின் மொபைல்போன் எண்களுக்கு, போன் செய்து கருத்து கேட்பார்கள். அதன் அடிப்படையில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களின் செயல்பாடுகளும் தெரிந்துவிடும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.போலீசார் எப்படி நடந்து கொண்டனர்?இரண்டு நாட்களுக்கு முன், அனைத்து மகளிர் மத்திய பகுதி போலீசில் புகார் அளித்த பி.என்.புதுாரை சேர்ந்த திவ்யா, 32 என்பவர் கூறுகையில், ''நான் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் குறித்து அன்றைய தினம் மாலை, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆச்சரியமாக இருந்தது.போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் எவ்வாறு நடந்து கொண்டனர், உங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா, புகாரை விசாரித்த அதிகாரி யார், உங்கள் பார்வையில் போலீசாரின் நடவடிக்கை எவ்வாறு இருந்தது என, கருத்து கேட்டனர். இதற்கான பதிலை அளித்தபின், போலீசாரின் சேவைகளுக்கு 'நன்று', 'மிக நன்று', 'மோசம்' என, 'ரேட்டிங்' கேட்டு பெற்றனர்,'' என்றார்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#mybuddys coimbatore கோவை:கோவையில், 10 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலம், நேற்று அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

கோவை சுக்கிரவார்பேட்டையில், பழமையான பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து உணவகம் நடத்தி வந்தார். இது தொடர்பான வழக்கு, 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. சில மாதங்களுக்கு முன், வழக்கு முடிவுக்கு வந்தது. இதன் அடிப்படையில், கோவை மண்டல ஹிந்து சமய அறநிலையத் துறை இணை கமிஷனர் செந்தில் வேலவன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டடங்கள்இடித்து தரைமட்டமாக்கப் பட்டன.அறநிலையத் துறை உதவி கமிஷனர் விஜயலட்சுமி கூறுகையில், ''990 சதுர அடி கொண்ட இந்த இடத்தின் இன்றைய மார்க்கெட் விலை, ஒரு கோடி ரூபாய். கோவை மண்டலத்தில் ஆக்கிரமிப்பில் இருக்கும் பகுதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு வருகின்றன. படிப்படியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்,'' என்றார்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#mybuddys coimbatore

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#Tamil news வால்பாறை

வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாககாட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. அதிகாலை நேரத்தில் வால்பாறை நகர் பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் சாலையில் உலா வந்த காட்டு யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள சிறு வனச்சோலைக்குள் முகாமிட்டிருந்த காட்டு யானை நேற்று அங்கிருந்து சிறுகுன்றா எஸ்டேட் மேல் பிரிவு வழியாக சோலையார் எஸ்டேட் வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக காட்டு யானை ஒன்று உலா வருகிறது. இதனால் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்பவர்கள், நடைபயிற்சி செல்பவர்கள் பீதியடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore கோவை
கோவை போத்தனூர் அருகே குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் போத்தனூர் அருகேயுள்ள மேட்டூர் பகுதியில் தனியார் குடோனில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போத்தனூர் போலீசார் குறிப்பிட்ட குடோனுக்கு சென்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து, அங்கிருந்து சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, குட்கா பொருட்களை பதுக்கி வைத்தது தொடர்பாக குடோன் உரிமையாளர் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore தமிழகத்தில் வரும் கல்வியாண்டில்‌ சிறுபான்மையற்ற, தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌, எது நுழைவு நிலையோ அந்த வகுப்பில்‌ இலவச மற்றும்‌ கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டத்தின்படி கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு இணையவழியில்‌ விண்ணப்பிக்க ஆட்சித்தலைவர்‌ ஜி.எஸ்‌.சமீரன்‌ அழைப்புவிடுத்துள்ளார்‌.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்‌ தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு அனைத்து மாணவ மாணவியர்களுக்கு ஆரம்ப கல்வி முதல்‌ உயர்கல்வி வரை தடையின்றி பயில பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்‌ ஒரு பகுதியாகவே, ஏழை எளிய மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளின்‌ ஆரம்பக்கல்வியினை உறுதி செய்யும்‌ வகையில்‌ கட்டாயக்‌ கல்விச்‌ சட்டம்‌ 2009 ன்படி அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதி தனியார்‌ பள்ளிகளில்‌ செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின்‌ படி கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ செயல்பட்டு வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த பகுதிகளில் அருகாமையில்‌ 1 கி.மீ நுழைவுநிலை வகுப்புகளில்‌ (எல்‌.கே.ஜி அல்லது முதலாம்‌ வகுப்பு) குறைந்தபட்சம்‌ 25 சதவிகிதம்‌ இட ஒதுக்கிட்டின்‌ படி சேர்க்கை வழங்கிட பள்ளிக்ளுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி வரும் கல்வியாண்டிற்கான கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறுபான்மையற்ற தனியார்‌ சுய நிதி பள்ளிக்ளில்‌ எது நுழைவு நிலையோ (எல்‌.கே.ஜி அல்லது முதலாம்‌ வகுப்பு) அந்த வகுப்பில்‌ 25 சதவீத ஒதுக்கீட்டின்‌ கிழ்‌ மாணவர்‌ சேர்க்கைக்கு இணையவழியில்‌ தமிழ்நாடு அரசு கல்வித்துறையின்‌ இணையதளத்தில்‌ https://rte.tnschools.gov.in/ 05.07.2021 முதல்‌ 03.08.2021 வரை விண்ணப்பம்‌ அளிக்கலாம்‌. சேர்க்கைக்கான விண்ணப்பம்‌ அளிக்கும்‌ பெற்றோர்கள்‌ தங்கள்‌ வீடுகளின்‌ அருகில்‌ 1 கி.மீ தொலைவில்‌ உள்ள பள்ளியில்‌ எது நுழைவு நிலையோ (எல்‌.கே.ஜி அல்லது முதலாம்‌ வகுப்பு) அந்த வகுப்பிற்கு விண்ணப்பம்‌ அளிக்க வேண்டும்‌.
மேலும்‌, அந்தந்த பள்ளிகளில்‌ விண்ணப்பங்கள்‌ ஏதேனும்‌ பெறப்பட்டால்‌, பெற்றோர்களுக்கு ஒப்புகை சீட்டு உடன்‌ தவறாது வழங்கவேண்டும்‌. இவ்விண்ணப்பங்களை அப்பள்ளியிலேயே இணையவழியில்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌. முதன்மை கல்வி அலுவலகம்‌, மாவட்ட கல்வி அலுவலகங்கள்‌, வட்டார கல்வி அலுவலகங்கள்‌, அனைவருக்கும்‌ கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும்‌ விண்ணப்பங்களை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்‌. நிர்ணியிக்கப்பட்ட இடங்களை விட அதிகமான விண்ணப்பங்கள்‌ பெறப்படின்‌ குலுக்கல்‌ முறையில்‌ விண்ணப்பங்கள்‌ தேர்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார்‌.
விண்ணப்பிக்கும்‌ போது புகைப்படம்‌, பிறப்பு சான்று அல்லது பிறப்பு சான்றிதழக்கான பிற ஆவணம்‌, இருப்பிட சான்று, வருமான சான்று(ஆண்டு வருமானம்‌ ரூ.2இலட்சத்திற்கும்‌ கீழ் உள்ளோர்‌), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில்‌ முன்னுரிமை கோரும்‌ நபர்கள்‌ உரிய அலுவலரிடம்‌ பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின்‌ நகல்‌, ஜாதி சான்றிதழ்‌ ஆகிய ஆவணங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ என்று கூறியுள்ளார்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#good morning

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore our anchor

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore our anchor

Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் கூட்டத்துடன் சேராமல் பாகுபலி என்ற யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த யானையால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றாலும், தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து, விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக பாகுபலி யானையின் நடமாட்டத்தை கண்டறிய யானையை பிடித்து ரேடியோ காலர் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பாகுபலி யானையை பிடிக்க டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கலீம், மாரியப்பன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று மேலும் டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து வெங்கடேஷ் என்ற கும்கி யானை மேட்டுப்பாளையத்திற்கு வந்தது.

நீண்ட தூரம் பயணம் செய்து வந்த கும்கி யானை வெங்கடேஷ் உடல் வெப்பத்தை தணித்துக்கொள்ள அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் டிரம்மில் இருந்து தண்ணீரை தும்பிக்கையால் தனது உடல் மீது பீச்சியடித்தது. அதன் பின்னர் யானைக்கு பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு ஓய்வு கொடுக்கப்பட்டது. பாகுபலி யானைக்கு ரேடியோ காலர் பொருத்துவதற்கு அதன் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore இடிகரை

பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெட்டதாபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், தீலக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் ஒன்று போலீசாரை பார்த்ததும் நிற்காமல் திரும்பி செல்ல முயன்றது.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் உடனடியாக, அந்த ஜீப்பை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். இதில், சீட்டுக்கு அடியில் 96 மதுபாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணயைில், அவர்கள் காரமடை வெள்ளியங்கிரியை சேர்ந்த மணி என்பவரின் மகன்கள் தமிழ்செல்வன் (32), மகேஷ்குமார் (30) என்பதும், மதுபாட்டில்களை கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்தும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து, ஜீப்பை பறிமுதல் செய்தனர்.

இதேபோல ஒன்னிபாளையம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மினி லாரியில் கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 48 மதுபாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மினிலாரி டிரைவர் சசிக்குமார் (38), விஜயகுமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து, மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore கோயம்புத்தூர் மாவட்டத்தில் வலி நிவாரணி மற்றும் மயக்கத்திற்கு பயன்படுத்தும் டைடல் டெபென்டல் என்ற மாத்திரைகளை ஒரு கும்பல் போதைக்காக விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சாய் பாபா காலனி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் கவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் ஜானகிராமன், கபிலேஷ், பார்த்திபன் மற்றும் முகமது என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 650 வலி நிவாரணி மாத்திரைகள், 12,000 ரூபாய் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர். இந்த கும்பல் கல்லூரி மாணவர்களை குறிவைத்து அவர்களிடம் போதைக்காக வலிநிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனர். இதனை தண்ணீரில் கலந்து போதைக்காக பயன்படுத்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

image
Download Mybuddys app to like , share and comment!
media 17 profile picture
media 17
Translate   4 years ago

#coimbatore வால்பாறை

வால்பாறையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.71 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கஞ்சா விற்பனை

வால்பாறை காமராஜ் நகர் குடியிருப்பு பகுதியில் பெண் ஒருவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வால்பாறை இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் அந்தப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி (வயது 32) என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.

பெண் கைது

அப்போது அங்கு 1 கிலோ 350 கிராம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை செய்தபோது, வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது உறுதியானது.

இதையடுத்து போலீசார் முத்துலட்சுமியை கைது செய்ததுடன், அவருடைய வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் ரூ.71 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து போலீசார் காமராஜ் நகர் பகுதி மற்றும் வால்பாறை நகர் பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

image
Download Mybuddys app to like , share and comment!
  • More info
  • Following 1

  • miyuzmitzi
  • More info
  • Followers 0

  • More info
  • Groups 0

Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil

© Mybuddys 2020

  • About
  • Blog
  • Contact Us
  • Developers
  • More
    • Privacy Policy
    • Terms of Use
    • Return and Refund Policy
    • GDRP

Report this User

Important!

Are you sure that you want to remove this member from your family?

You have poked Media17news

New member was successfully added to your family list!

Crop your avatar

avatar

© 2025 Mybuddys Official

Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil
  • Home
  • About
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Blog
  • Developers
  • More
    • Return and Refund Policy
    • GDRP

Comment reported successfully.

Post was successfully added to your timeline!

You have reached your limit of 5000 friends!

File size error: The file exceeds allowed the limit (92 MB) and can not be uploaded.

Unable to upload a file: This file type is not supported.

We have detected some adult content on the image you uploaded, therefore we have declined your upload process.