Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo

Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
  • Mybuddys Official LogoMybuddys Official Logo
  • Mybuddys Official Logo Mybuddys Official Logo
Gowri prabu Cover Image
User Image
Drag to reposition cover
Gowri prabu Profile Picture
Gowri prabu

World's Best Social Community app for Connect the World !

  • 20
  • 44 Likes
  • 0 Following
  • 1 Followers
  • Timeline
  • Photos
  • Videos
  • Groups
    • Following
    • Followers
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

இந்தி திணிப்பை ஏற்க முடியாது; தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது' - ப.ரஞ்சித் பேட்டி

'தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள்' என்று கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் ப.ரஞ்சித்.

நீலம் பண்பாட்டு மைய நிறுவனரும் திரைப்பட இயக்குனருமான ப.ரஞ்சித், 'புதிய தலைமுறை' செய்தியாளர் கணேஷ் குமார் நடத்திய கலந்துரையாடலுடன் போது கூறியதாவது:-


ஓடிடி தளம் குறித்து..

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இலக்கணம் சார்ந்த ஆர்வம் அதிகளவில் உள்ளது. கலைத்துறை எல்லோருக்கமான துறையாகவே இருந்து வருகிறது. ஓடிடி தளம் என்பது அனைத்து தயாரிப்பாளர்களுக்கான தளமாக இல்லை. பெரிய அளவிலான படத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம் சிறிய அளவிலான திரைப்படங்களுக்கு ஓடிடியில் கிடைப்பதில்லை.

கேஜிஎஃப், பாகுபலி வெற்றி, பான் இந்தியா படங்கள் குறித்து..

பாகுபலி, கேஜிஎப் போன்ற இந்தியா பேன் திரைப்படங்கள் என்பது ஒரு சீசன் மட்டுமே, கதாநாயகனை சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள். மற்ற எல்லா சினிமாக்களை விட தமிழ் சினிமா தொழில்நுட்பம், கதைகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தரமானதாக உள்ளது.

மொழித்திணிப்பு குறித்து..

மொழித் திணிப்பு என்பதை ஒரு காலமும் ஏற்க முடியாது. ஹிந்தி எனக்கு தெரியவில்லை என்பதற்காக வேலை வாய்ப்போ சினிமாவை எடுக்க முடியவில்லை என்ற நிலையை ஏற்படுத்தவில்லை. எனது திறமை ஹிந்தியை காட்டிலும் மிகவும் முக்கியமானதாக பார்க்கிறேன். தமிழ்தான் எனது திறமையை வளர்த்தது. இந்தியாவின் முக்கிய மொழியாக அங்கீகரிப்பதோ, ஹிந்தியை பேச வேண்டும் என்ற திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அதற்கான தேவையும் இல்லை.

மொழி குறித்து சமீபகால உரையாடல் குறித்து..

வட இந்தியர்கள் தென் இந்தியர்களை அடையாளப்படுத்தும் விதமே சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு குணம் உள்ளது, அந்த குணங்களின் அடிப்படையில் தேசமாக ஒன்றினைந்துள்ளோம். தேசத்தின் ஒற்றுமை மொழியால் வேறுபடுத்தி பார்க்க கூடாது. தமிழ் தேசியம் பேசுபவர்கள் எப்பொழுதுமே திராவிடத்தை ஏற்க மாட்டார்கள். அது அவர்களின் விருப்பம்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

நடிகர் விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு 'விவேக்' பெயர் - அரசாணை வெளியீடு

நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக்கின் பெயரை அவர் வசித்த பகுதிக்கு சூட்ட வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரமலான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஆழ்வார்திருநகரில் விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்று ரமலான் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு வழங்கினார். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கை இழந்த சந்துரு என்ற கல்லூரி மாணவனுக்கு சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தனது ஒரு மாத சம்பளத்தை நிதியுதவியாக வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், ''கலைஞர் காலம் முதலே திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. பெண்களுக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தில் இருந்து அதற்கு முன்னதாக 41 சதவீதமாக இருந்த பயணிகள் பயணம் தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தால் ஒருநாளைக்கு அரசுக்கு 6 கோடி ரூபாய் இழப்புதான். எனினும் இலவச பேருந்து பயணம் பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது.

திமுக பெண் கவுன்சிலர்கள் கணவன் சொன்னாலும் கேக்காமல் இரவு 12 மணிக்கு கூட மக்கள் பணி செய்கிறார்கள். 1 லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகள் நட்ட மறைந்த நடிகர் விவேக், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமுக்கு பிடித்த நடிகர். அப்படியொரு நடிகரான விவேக் குடும்பத்தினர் அவர் இல்லம் அமைந்துள்ள தெருவிற்கு அவர் பெயரை சூட்ட வேண்டும் என கொடுத்த மனுவை ஏற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக விவேக் பெயரை சூட்ட வேண்டும் என அரசாணையை வெளியிட உத்தரவிட்டார். வரும் மே மாதம் 3 ஆம் தேதி அதன் பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது'' எனப் பேசினார்.

இதையும் படிக்கலாம்: 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் மாடல் தான் திராவிட மாடல்' - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

நடனமாடியபடி ஆசிரியரை தாக்க முயன்ற தனியார் பள்ளி மாணவர்கள்: குமரியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளியாடி அருகே தனியார் பள்ளியில் பாடம் நடத்தும்போது நடனமாடி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வகுப்பறையில் நடனமாடுவது ஆசிரியர்களை தாக்க முயல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளி ஒன்றில் கடந்த வியாழன் அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனமாடுவதும் வேறு காட்சியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மேஜை மேல் ஏறி நின்று ஆடுவதும் ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக் கொண்டு ஆசிரியரை தாக்க செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மீயூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். ஒரு மாணவவனை ஆசிரியர் எச்சரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம்வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாரும் மாவட்ட கல்வி அதிகாரியும் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

from நடனமாடியபடி ஆசிரியரை தாக்க முயன்ற தனியார் பள்ளி மாணவர்கள்: குமரியில் அதிர்ச்சி சம்பவம்

பள்ளியாடி அருகே தனியார் பள்ளியில் பாடம் நடத்தும்போது நடனமாடி ஆசிரியரை தாக்க முயன்ற மாணவர்கள் வீடியோ வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மாணவர்கள் வகுப்பறையில் நடனமாடுவது ஆசிரியர்களை தாக்க முயல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைபள்ளி ஒன்றில் கடந்த வியாழன் அன்று மாணவர்கள் வகுப்பறையில் ஆட்டம் போட்டு ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த பள்ளியில் 11-ம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஒரு மாணவர் வாசலில் நின்று நடனமாடுவதும் வேறு காட்சியில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது மேஜை மேல் ஏறி நின்று ஆடுவதும் ஒரு மாணவர் டெஸ்க்கை தூக்கிக் கொண்டு ஆசிரியரை தாக்க செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

மீயூசிக் பின்னணியில் இந்த வீடியோவை யாரோ சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். ஒரு மாணவவனை ஆசிரியர் எச்சரிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.


இதுவரை அரசு பள்ளி மாணவர்கள் செய்யும் சேட்டைகள் குறித்த வீடியோக்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் வலம்வந்த நிலையில் தற்போது அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீசாரும் மாவட்ட கல்வி அதிகாரியும் நேற்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

Amazing dolphins? #tamilwhatsappstatus #shorts  #tamilshorts  #tamil  #support #mybuddyspost #Motivation #Pubgmobile

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

Water ? Gun #tamil  #tamilshorts  #Motivation #Pubgmobile #mybuddyspost #trending #support

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

Amazing gadget

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பேச்சுவார்த்தை

இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக நீண்ட மாதங்களாக இந்திய பயணத்தை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒத்திவைத்திருந்த நிலையில், இறுதியாக நேற்று குஜராத் வந்தடைந்தார். முதல் நாளில் காந்தி ஆசிரமம், அக்ஷர்தாம் கோயிலுக்கு சென்று பார்வையிட்ட போரிஸ் ஜான்சன், அதானி உள்ளிட்ட பெருந்தொழிலதிபர்களையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து முதலீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற போரிஸ் ஜான்சன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார். குறிப்பாக பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பரம் உறவை மேம்படுத்துவது குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான படையெடுப்பால், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

இன்னும் ஒருசில தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது' -அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில தினங்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

சென்னை - அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மின் உற்பத்திக்காக 2 மாதங்களின் நிலக்கரி தேவைக்காக மட்டும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரமும் நிலக்கரியும் வந்து சேராததே பிரச்னைக்கு காரணம் என்று செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு குறித்த புகார்களை 94987 94987 என்ற 24 மணி நேர சேவை எண்ணில் தெரிவித்தால் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றும், தற்போது இந்த எண்ணில் வரும் புகார்கள் 99 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மின்தடை குறித்து பாஜக மாநிலத்தலைவர் மக்களிடம் தவறான கருத்துகளை கூறி மலிவான விளம்பரத்தை தேடி வருவதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார். நமக்கான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் இலக்காக உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

'தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு' - பொதுமக்கள் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின்தடை ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பினர். மின் விசிறிகள் இயங்காததால் முதியோரும் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்போரும் தவித்துப் போயினர்.

மயிலாடுதுறையில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக கூறி செயற்பொறியாளர் அலுவலகத்தை பொதுமக்களும் விவசாயிகளும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தடையின்றி மின்சாரம் விநியோகிக்குமாறு அவர்கள் முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இரவு நேரத்தில் மின்தடை ஏற்படுவதாகக் கூறி, மின்வாரிய அலுவலகம் மீது சிலர் கல்வீசி தாக்கியுள்ளனர். இதையடுத்து, மின்வாரிய அலுவலர் பாதுகாப்புக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விருதுநகரில் அடுத்தடுத்து மின்வெட்டு ஏற்பட்டதால் அதிருப்தியுற்ற அய்யனார் நகர் பொதுமக்கள், பர்மா காலனி சந்திப்பில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கைவிடுமாறு அறிவுறுத்திய காவல் துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்களும் விவசாயிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

புதுச்சேரி: தடையை மீறி பேனர் வைத்ததாக புகார் - சமூக ஆர்வலர் மீது தாக்குதல்
புதுச்சேரி: தடையை மீறி பேனர் வைத்ததாக புகார் - சமூக ஆர்வலர் மீது தாக்குதல்
Gp News ஏப்ரல் 23, 2022

புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தை மீறி, அமித்ஷாவை வரவேற்று பேனர் வைத்தவர்கள் குறித்து புகார் அளிக்கச் சென்ற சமூக ஆர்வலர் மீது போலீசார் முன்னிலையில் பாஜகவினர் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் பேனர் வைப்பதற்கான தடை சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் நாளை புதுச்சேரிக்கு வருகை தர உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று, பாஜகவினர் ஒதியன்சாலை காவல் நிலையம் எதிரே பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் மோதி, முதியவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அப்போது சம்பவ இடத்திலிருந்த புதுச்சேரி போராளிகள் குழுவின் தலைவர் சுந்தர் என்பவர் இதுகுறித்து ஒதியன்சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுவது தொடர்பாக பொதுப்பணித் துறையினரிடம் முறையிடுமாறு போலீசார் சுந்தரிடம் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை அதிகாரி ஏழுமலை என்பவரிடம் சுந்தர் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த பாஜகவினர், அரசு அலுவலகத்தில் வைத்து போலீசார் முன்னிலையில் சுந்தரை கடுமையாக தாக்கியும், ஆபாசமான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.


இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த சுந்தரின் ஆதரவாளர்கள் அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பொது இடத்தில் பேனர் வைத்தது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற சமூக ஆர்வலர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி புதுச்சேரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

நடிகர் மாதவன் மகனுக்கு நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து
GP News ஏப்ரல் 23, 2022

நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியின் 800 மீட்டர் நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் மாதவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்க பதிவில், இந்த சாதனை மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி நாடே பெருமை கொள்வதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். இந்தியா சார்பில் விளையாடி பதக்கம் வென்ற மாதவனின் மகனுக்கு பலருக்கும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் வேதாந்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.


இதுதொடர்பாக ப்ரீத்தி ஜிந்தா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "ஆஹா! இது மிகவும் சிறப்பான செய்தி. நடிகர் மாதவன் மற்றும் அவரது மனைவி சரிதா இருவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் இருவரும் ஒரு அற்புதமான வேலையைச் செய்திருக்கிறீர்கள். வேதாந்த் இப்படி வெற்றியில் ஜொலிப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அவரை மேலும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் ஆசீர்வதிப்பாராக'' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகை பிரியங்கா சோப்ராவும் நடிகர் மாதவனின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

நெல்லை - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை
Gp News ஏப்ரல் 23, 2022

மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லைக்கு புதிதாக சேவையைத் தொடங்கிய ரயிலில் பொதுமக்களும் வர்த்தகர்களும் உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினர்.

கோடை சீசனையொட்டி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில் சேவை தொடங்கியுள்ளது. வியாழனன்று இரவு நெல்லையிலிருந்து புறப்பட்ட சிறப்பு ரயில், நேற்றிரவு மேட்டுப்பாளையத்திலிருந்து நெல்லை புறப்பட்டது. கோவை, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், தென்காசி என முக்கிய நகரங்களை இணைக்கும் இந்த ரயிலில் மேட்டுப்பாளையத்திலிருந்து 75 சதவிகிதம் அளவுக்கு பயணிகள் புறப்பட்டனர்.

இந்த ரயில் சேவைக்கு மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு தெரிவித்த பொதுமக்களும் வர்த்தகர்களும் உற்சாகமாக வழியனுப்பினர். மேலும், ஜூன் இறுதி வரை இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாரந்திர ரயிலை, தினசரி சேவையாக்கி நிரந்தரமாக்கிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

நெல்லை: கோயில் திருவிழாவில் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு
Gp News ஏப்ரல் 23, 2022

நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் ஏற்படுத்திய ஆறுமுகம் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா. இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தச் சூழலில் நேற்று இரவு கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த ஆறுமுகம் என்ற நபர், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். சம்பவத்தின்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆய்வாளரை மீட்டு உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்திக்குத்து காயம் ஏற்படுத்திய ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


from நெல்லை: கோயில் திருவிழாவில் பெண் எஸ்.ஐ.யின் கழுத்தறுப்பு


நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் ஏற்படுத்திய ஆறுமுகம் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் தெரசா. இவர் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

இந்தச் சூழலில் நேற்று இரவு கோயில் கொடை விழாவில் பாதுகாப்பு ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த ஆறுமுகம் என்ற நபர், கடந்த மாதம் தனக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்தது குறித்து உதவி காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நேரத்தில் ஆறுமுகம் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி காவல் ஆய்வாளர் மார்க்கெட் தெரசாவை கழுத்தில் அறுத்துள்ளார். சம்பவத்தின்போது அருகில் இருந்த மற்ற காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல் ஆய்வாளரை மீட்டு உடனடியாக அவர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கத்திக்குத்து காயம் ஏற்படுத்திய ஆறுமுகத்தை காவல்துறையினர் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

Yenakku pondatti venum... ? #tamil  #tamilwhatsappstatus #funny #trending #gowri_prabu #support #காலைவணக்கம் #expriment #tamilshorts  #shorts 

Please log in to like, wonder, share and comment!
Gowri prabu profile picture
Gowri prabu
Translate   3 years ago

Namba life ipdiyeh poytumoh... ??? #tamilwhatsappstatus #expriment #trending #gowri_prabu #support #காலைவணக்கம் #tamil  #tamilshorts  #funny #shorts 

image
Please log in to like, wonder, share and comment!
  • More info
  • Following 0

  • More info
  • Followers 1

  • Karthick
  • More info
  • Groups 0

Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil

© Mybuddys 2020

  • About
  • Blog
  • Contact Us
  • Developers
  • More
    • Privacy Policy
    • Terms of Use
    • Return and Refund Policy
    • GDRP

Report this User

Important!

Are you sure that you want to remove this member from your family?

You have poked BUDDYSA5432F

New member was successfully added to your family list!

Crop your avatar

avatar

© 2025 Mybuddys Official

Language
  • English
  • Tamil ( தமிழ் )
  • Hindi (हिंदी)
  • Telugu ( తెలుగు )
  • Punjabi ( ਪੰਜਾਬੀ )
  • Gujarati ( ગુજરાતી )
  • Kannada (ಕನ್ನಡ )
  • Bangali (বাঙালি)
  • Odia (ଓଡ଼ିଆ)
  • Assamese (অসমিয়া )
  • Marathi (मराठी)
  • Konkani (कोंकणी )
  • Nepali (नेपाली)
  • Manipuri (মৈইতৈইলোন)
  • Malayalam (മലയാളം)
  • Tamil
  • Home
  • About
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Blog
  • Developers
  • More
    • Return and Refund Policy
    • GDRP

Comment reported successfully.

Post was successfully added to your timeline!

You have reached your limit of 5000 friends!

File size error: The file exceeds allowed the limit (92 MB) and can not be uploaded.

Unable to upload a file: This file type is not supported.

We have detected some adult content on the image you uploaded, therefore we have declined your upload process.