மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே. 1
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாநவின் றேத்துமே நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே. 2
ஆளா காராளா னாரை அடைந்துய்யார் மீளா வாட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளா தசுரை யோதொழும் பர்செவி வாளா மாய்ந்துமண் ணாகிக் கழிவரே. 3
நடலை வாழ்வுகொண் டென்செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொற்பிர மாணமே கடலின் நஞ்சமு துண்டவர் கைவிட்டால் உடலி னார்கிடந் தூர்முனி பண்டமே. 4
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார் நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே. 5
குறிக ளுமடை யாளமுங் கோயிலும் நெறிக ளுமவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியி லீர்மன மென்கொல் புகாததே. 6
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியுந் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே வீழ்த்த வாவினை யேன்நெடுங் காலமே. 7
எழுது பாவைநல் லார்திறம் விட்டுநான் தொழுது போற்றிநின் றேனையுஞ் சூழ்ந்துகொண் ட
#